மூன்று விமானப் பயணிகள், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

  • Post author:
You are currently viewing மூன்று விமானப் பயணிகள், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

இன்று சனி காலை, வட ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியில் இருந்து ஒஸ்லோ விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் விடுதியில் அமர்ந்தப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை, Ullensaker நகராட்சியில் தகவல் தொடர்பு மேலாளர் Siri Wolland, Dagbladet பத்திரிகைக்கு கூறுகையில், ஒஸ்லோ விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகள் விமானங்களுக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

– குறித்த மூவரும் விடுதி ஒன்றில்14 நாட்கள் தனிமைப்படுத்தலில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று Wolland மேலும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட வெளிநாட்டு பயணிகளை Jessheim இலுள்ள LHL மருத்துவமனையில் தனிமையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதுவரை, எவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் Wolland மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள