யாழில் ஆசிரியர் மீது வழிமறித்துத் தாக்குதல்!

You are currently viewing யாழில் ஆசிரியர் மீது வழிமறித்துத் தாக்குதல்!

இளவாலையில், இன்று (17) காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர்,  இனந்தெரியாத குமுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அரியாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர், ஆசிரியரை வீதியில் வழிமறித்து, அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனரென, இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் பாடசாலை அதிபர் ஊடாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள