யாழில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

You are currently viewing யாழில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்.அச்சுவேலி சிறீலங்கா காவற்துறையினர் பிரிவிற்குட்பட்ட புத்துார் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

நேற்றைய தினம் மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சேர்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் இன்று காலை ஆகியும் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவைளை

யாழ்.சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணேஸ் துஜீவன் (வயது23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் தங்கி நின்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று முன் தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்துள்ளதுடன், இளைஞன் தவறான முடிவெடுத்திருக்கலாமா? என சிறீலங்கா காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments