யாழில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டவர் பலி!

You are currently viewing யாழில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டவர் பலி!

யாழ்.சங்கானை – விழிசிட்டி பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் ஒருவன் உழவு இயந்திரத்தின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளான். 

இந்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. உழவு கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீதி ஓரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது உழவு இயந்திர சாரதிக்கு அருகிலிருந்து பயணித்த இளைஞன் நிலைதடுமாறு சக்கரத்திற்குள் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த இளைஞன் சங்கானையை சேர்ந்த உ.சுரேஸ்குமார் (வயது32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்

பகிர்ந்துகொள்ள