யாழில் பெரும் பரபரப்பு: தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

You are currently viewing யாழில் பெரும் பரபரப்பு: தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

யாழ் – நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயதான நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஐந்து நாட்களாக காணமல்போய் தேடப்பட்டு வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அவரின் வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் பழுதடைந்து, துர்நாற்றம் வீசப்படும் நிலையில் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சிறீலங்கா காவற்துறையினர் இன்னும் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments