யாழில் மக்களுக்கு பொறுப்பில்லை அதுவே இன்றைய அபாய நிலைக்கு காரணம்!

You are currently viewing யாழில் மக்களுக்கு பொறுப்பில்லை அதுவே இன்றைய அபாய நிலைக்கு காரணம்!

வடமாகாணம் கொரோனா தொற்று அபாயத்தில் இருப்பதற்கு காரணம் மக்களுடைய ஒத்துழைப்பு இன்மையே என சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், 

கொரோனா அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து எமது மாகாணத்திற்குள் நுழைந்தவர்கள்  தொடர்பான தகவல்களை வழங்காமையே இந்த நிலைக்கு காரணம். எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை, 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் வழங்கத் தவறியமையே கொரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணம்.மருதனார்மட தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும்வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், 

தொற்றாளர்கள்அதிகமாகவுள்ள இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே பொதுமக்களுக்கு ஒரு அறிவித்தலை வழங்கியிருந்தேன். வெளியிடங்களிலிருந்து யாராவது உங்கள் பிரதேசங்களுக்கு வந்தால்

அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்குமாறு.ஆனால் இந்த அறிவிப்பு தொடர்பில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழையாமையே இன்றுதொற்றுப் பரவுவதற்கு ஏதுவாகிவிட்டது. வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை. 

ஆகவே மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொற்றிலிருந்துதம்மையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’எனக் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள