யாழில் மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசு!

You are currently viewing யாழில் மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசு!

மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கருத்தரித்த ஒருவர் இதனை பிரசவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு மூன்று மாத வளர்ச்சிக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments