யாழில் வயோதிபருக்கு வாள்வெட்டு!

You are currently viewing யாழில் வயோதிபருக்கு வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பல் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள