யாழில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் தனிமைப்படுத்தலில்!

You are currently viewing யாழில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் வெளியே போவது மிக ஆபத்தான விடயம். வடக்கு மாகாணத்தில் தொற்று அதிகரிப்பதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம். வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக தமது பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தமது வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள