யாழில் 75 பேர் உட்பட வடக்கில் நேற்று 141 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழில் 75 பேர் உட்பட வடக்கில் நேற்று 141 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 75 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் -75, கிளிநொச்சி – 20, முல்லைத்தீவு -03, வவுனியா -26 மற்றும் மன்னாரில் நேற்று 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவற்றுடன் தொற்று நோயின் ஆரம்பம் முதல் யாழ்ப்பாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,253 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சியில் 1,386, முல்லைத்தீவில் – 1,233, வவுனியாவில் – 1,318 மற்றும் மன்னாரில் 812 பேருக்கு மொத்மாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments