யாழில் 91 பேர் உட்பட வடக்கில் நேற்று 160 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழில் 91 பேர் உட்பட வடக்கில் நேற்று 160 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 91 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் -91, கிளிநொச்சியில் -08, முல்லைத்தீவில் -06, வவுனியாவில் 28 மற்றும் மன்னாரில் 27 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவற்றுடன் யாழ்ப்பாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,553 ஆக அதிகரித்துள்ளது.

கிளிநொச்சியில் -1,408, முல்லைத்தீவில் – 1,254, வவுனியாவில் – 1,383, மன்னாரில் – 912 பேரும் இதுவரை தொற்றுக்குள்ளாகி பாதிக்க்ப்பட்டுள்ளமை கோவிட் 19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments