யாழ்ப்பாணத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா- வடக்கில் 77 பேர்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா- வடக்கில் 77 பேர்!

யாழ். மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 272 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 77 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் 62 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் என 77 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments