யாழ்ப்பாணத்தில் 15 கட்சிகள்!மன்னாரில் 16 கட்சிகள்!கட்டுப்பணம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் 15 கட்சிகள்!மன்னாரில் 16 கட்சிகள்!கட்டுப்பணம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சை குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

இதேவேளை

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஈ.பி.டி.பி கட்சியானது மன்னார் மாவட்டத்தில் 2 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக்கு 10 கட்சிகளும்,1 சுயேட்சைக் குழு உள்ளடங்களாக 11 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 8 கட்சிகளும், 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 9 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12 கட்சிகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும், முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 13 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments