யாழ்ப்பாணப் பகுதியில் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்ந்த இளைஞன்!

You are currently viewing யாழ்ப்பாணப் பகுதியில் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்ந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் – இளவாலை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம்  நேற்றைய தினம் (28-03-2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் இளவாலை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட கலைவாணி வீதி வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வரும் நிலையில் சீருடையில் இருந்த கயிற்றினை பயன்படுத்தி தூங்கிட்டதாக அறிய முடிகிறது.

இன்று அவர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து இளவாலை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிறீலங்கா காவற்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments