யாழ்ப்பாணம் காவல்த்துறை நிலையத்தைச் சேர்ந்த 11 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழ்ப்பாணம் காவல்த்துறை நிலையத்தைச் சேர்ந்த 11 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காவல்த்துறை நிலையத்தைச் சேர்ந்த 11 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணம் காவல்த்துறை நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காவல்த்துறை நிலையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட உத்தியோகத்தர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகிய இடங்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு கொரோனா அறிகுறிகளுடன் சென்றவர்கள். ஒருவர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றவர்.

மல்லாவி வைத்தியசாலைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments