யாழ் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பப்பெண் பலி!!

You are currently viewing யாழ் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பப்பெண் பலி!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் காவல்த்துறையின் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், 

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் சென்று மோட்டார் சைக்கிள் கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார்.

குறித்த விபத்தில் சிக்கியவர் சிறீலங்கா காவல்த்துறையின் தமிழ் அதிகாரி  என தெரியவந்துள்ளது.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பப்பெண் பலி!! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments