யாழ் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிப்பு!

You are currently viewing யாழ் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிப்பு!

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவதற்காக விசாரணை மற்றும் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(26.01.2023) காலை-10 மணி தொடக்கம் யாழ்.தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றது.

2303/15 மற்றும் 2310/45 இலக்க வர்த்தமானிப் பத்திரிகையில் 26.10.2022 மற்றும் 16.12.2022 அன்று பிரசுரிக்கப்பட்ட காணி எடுத்தல் சட்டம் பிரிவின் 7 ஆம் பிரிவின் கீழான அறிவித்தலின் பிரகாரம் காணிச் சுவீகரிப்புக்கு உள்ளான அனைவரும் தாமாக அல்லது எழுத்து மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நபர் மூலம் இதுதொடர்பான விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜே- 240, ஜே-246, ஜே-256,ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் காணியின் உரிமைகளை ஒப்புவிக்கும் உறுதி, ஆவணங்களுடன் வருகை தந்து ஆர்வத்துடன் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையைக் காண முடிந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments