யாழ் தெல்லிப்பழையில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 18 வயதான இளைஞன் பலி!

You are currently viewing யாழ் தெல்லிப்பழையில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 18 வயதான இளைஞன் பலி!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments