யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் துரோகம்!

You are currently viewing யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் துரோகம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் எப்படியோ சட்டவிரோத கட்டுமானங்கள் வந்து விட்டவை. அவை எப்படியோ அகற்றப்பட வேண்டியவை. சிலர் ஆர்வக் கோளாறினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என கடுப்புத்தனமாக பதிலளித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா

இப்படிக் கூறுவதற்கு நா கூசவில்லையா? நீ மானத்தமிழனா? குறுக்குவழியில் பதவிக்கு ஆசைப்பட்டதற்கான பாதங்கழுவலா? என மக்களும் மாணவர்களும் விசனம் தெரிவித்துவருவதோடு உலகத்தமிழ் உறவுகளும் தலைவர்களும் ஜனநாயகத்தை படுகொலை செய்ததற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தொடங்கியுள்ளனர், இதேவேளை சிறீலங்கா இனவழிப்பு படையினர் கொரோனாவை காரணம் காட்டி மாணவர்கள் போராட்டத்தினை நிறுத்த முனைந்துகொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள