யாழ்.மாவட்டத்தில் 84 பேர் உட்பட வடக்கில் 130 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 84 பேர் உட்பட வடக்கில் 130 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 84 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 130 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 38 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 07 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

யாழ். சிறைச்சாலையில் ஒருவர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 06 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,

தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை,

பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் ஒருவர்,

பலாலி விமானப்படை முகாமில் ஒருவர்,

ஆனைவிழுந்தான்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 42 பேர் உட்பட 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments