ரணில் வீடு தீக்கிரை தொடர்பாக சஜித்தின் சகோதரியிடம் விசாரணை!

You are currently viewing ரணில் வீடு தீக்கிரை தொடர்பாக சஜித்தின் சகோதரியிடம் விசாரணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சி பிரேமதாஸ நேற்று கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலமளித்தார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நான் இன்று கொழும்பு குற்றவியல் விசாரணைத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டேன். ஜனாதிபதி ரணிலின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட அன்று ஆர்ப்பாட்ட இடத்தில் நானும் நின்றிருந்ததால் விசாரணைக்காக என்னை அழைத்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறே கோரினர். அதற்கமைவாக நான் எனது பதிலை வழங்கினேன். மிகவும் சுமுகமான முறையில் விசாரணை இடம்பெற்றது. வாக்குமூலமளித்த பின்னர் விசாரணை எனது விசாரணை முடிவுற்றது. எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை.

ஒவ்வொரு போராட்டங்கள் உள்ளன. போராட்டம் என்பது ஒரு போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியிலேயே போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வாக்குமூலமளிப்பதற்காக வருமாறு கூறியபோது நான் வந்து வாக்குமூலம் வழங்கினேன். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments