ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புடின் ஆணை!

You are currently viewing ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புடின் ஆணை!

ரஷ்ய ராணுவ படைகளின் பலத்தை 1.9 மில்லியனில் இருந்து 2.04 மில்லியனாக உயர்த்துவதற்கான ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 182 நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதலில் 48,000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தில் ஆயுதப் படை வீரர்களின் எண்ணிக்கையை 1.9 மில்லியனில் இருந்து 2.04 மில்லியனாக உயர்த்துவதற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் வியாழன்கிழமை கையெழுத்திட்டார்.

அதனடிப்படையில் 137,000 இராணுவ வீரர்களின் அதிகரிப்பு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆயுதப் படைகளின் ஊழியர்கள் மொத்தம் 2,039,758 அலகுகள், அவர்களில் 1,150,628 பேர் முழுநேர இராணுவப் பணியாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கடைசியாக நவம்பர் 2017 இல் விரிவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments