லெப்.கேணல் மங்களேஸ் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!!

You are currently viewing லெப்.கேணல் மங்களேஸ் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!!

லெப்.கேணல் மங்களேஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

லெப்.கேணல் மங்களேஸ் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 1
லெப்.கேணல் மங்களேஸ் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 2

லெப்.கேணல் மங்களேஸ்
பாலசுந்தரம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2008

தமிழீழ விடுதலைப்போராட்டப்பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றிஉழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ்அண்ணாஅவர்கள். 1990-ம்ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவதுவயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு“மங்களேஸ்”என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழி மூடும் நாள் வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிகநீண்டது.

தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ளவேண்டிய படையப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையாஅவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார்.

1991-ம்ஆண்டு யூலைமாதத்தில் ஆனையிறவுப்படைத்தளம்மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட “ஆகாயக்கடல்வெளி” நடவடிக்கையில் ஒருபோராளியாகப்பங்கெடுத்திருந்தவர்.

அதனைத்தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப்படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த“மின்னல்”இராணுவநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா.

1992-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம்பெற்றுவந்த மங்களேசண்ணா வேவுநடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகநடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப்போராட்டத்திற்கு வளம்சேர்க்கின்ற பலம்சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசைஅவர்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமாகவிளங்கினார்.

அவரது ஆளுமையை இனம்கண்டுகொண்ட சூசைஅவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னிமாவட்டத்தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து 1996-ம்ஆண்டு ஏப்ரல்மாதத்தில் யாழ்குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப்பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டுசெயற்பட்டகாலப்பகுதியிலும் ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த மங்களேசண்ணா 1996-ம்ஆண்டு யூலைவமாதத்தில் விடுதலைப்புலிகளால் “ஓயாதஅலைகள்-01” எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப் படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின்போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப்படைத்தளம் வெற்றிகொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது.

இதன்பின்னரான காலப்பகுதியில் மணலாறு-செம்மலையைத்தளமாகக் கொண்டு செயற்பட்ட கிழக்குமாகாணத்திற்கான கடல்வழி விநியோக அணிக்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோகநடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார்.

குறித்த இந்த கிழக்குமாகாணத்திற்கான கடல் வழி நடவடிக்கையின்போது ஒருசந்தர்ப்பத்தில் திருகோணமலை-புடவைக் கட்டுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார்.

தீவிரமருத்துவச்சிகீச்சைகளின்மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனைவிட வேறுபல தாக்குதல்களிலும் மங்களேசண்ணா விழுப்புண்பட்டிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது.

கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத்தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத்தளமாகக்கொண்டு இந்தியா-தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத்தேவையான மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனையமூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கின்ற உயரியபணிகளையும் செவ்வனேசெய்திருந்தார் மங்களேசண்ணா.

ஆழ்கடல்நடவடிக்கை கிழக்குமாகாணத்திற்கான கடல்நடவடிக்கை மன்னார்-தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள்நிறைந்த கடல்நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார்.

1999-ம்ஆண்டு டிசெம்பர்மாதத்தில் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஓயாதஅலைகள்-03 நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது சமநேரத்தில் கட்டைக்காட்டிற்கும் ஆனையிறவிற்கும் இடைப்பட்டபகுதியிலுள்ள புல்லாவெளி என்னும் இடத்தில் அமைந்திருந்த படையினரின் முகாமை கைப்பற்றுகின்ற பொறுப்பு மங்களேசண்ணாவிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புல்லாவெளிக்கு தாக்குதலணிகளை நகர்த்துவதானால் சுண்டிக்குளம் நீரேரியூடாக படகுகளில்த்தான் அணிகளை நகர்த்தவேண்டியிருந்தது.

அதற்கமைவாக மங்களேசண்ணா தலைமையிலான தாக்குதலணி இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறியவகைப்படகுகளில் சுண்டிக்குளம நீரேரியூடாகச் சென்று முகாமை அண்மித்ததும் இயந்திரத்தின் சத்தங்கள் படையினருக்கு கேட்கும் என்பதால் குறிப்பிட்ட தூரம்வரைக்கும் தண்ணீருக்குள்ளால் படகுகளை தள்ளிச்சென்று புல்லாவெளியில் தரையிறங்கி புல்லாவெளி படைமுகாம்மீது தாக்குதல்களைத்தொடுத்து அந்த முகாமை வெற்றிகொண்டனர்.

வெற்றிலைக்கேணி கட்டைக்காடு புல்லாவெளி படைத்தளங்களின் வெற்றியே தொடர்ந்துவந்த ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன.

ஆனையிறவுப்படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26-03-2000அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின்போது வெற்றிலைக்கேணியைத்தளமாகக்கொண்டு தரையிறங்கவேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதானபொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வுசெய்யப்பட்டிருந்தார்.

லெப்,கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்கநடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது.

2001-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதத்தில் மங்களேசண்ணா கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். (அதாவது சிறப்புத்தளபதிக்கு அடுத்தநிலையான பொறுப்பு) கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் கடற்புலிகளின் அரசியல்த்துறை கடற்புலிகளின் புலனாய்வுத்துறை கடற்புலிகளின் மருத்துவப்பகுதி முதலான கடற்புலிகளின் நிர்வாகக்கட்டமைப்புக்கள் அனைத்தையும் நேர்த்தியுடன் நிர்வகித்தமை.

மக்கள் சந்திப்புக்கள். மக்கள் அபிவிருத்திக்கட்டமைப்புக்கள். மீள்குடியேற்றம். சுனாமிஆழிப்பேரலைஅனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சுனாமி மீள்கட்டுமானப்பணிகள்.

2005 2006-ம்ஆண்டுகாலப்பகுதிகளில் மணலாறு-நாயாற்றுப் பகுதியைத் தளமாகக் கொண்டு திருவடி மக்கள் படைக்கட்டுமானப் பயிற்சிப்பாசறையை நிறுவி முல்லைத்தீவுமாவட்டத்தின் கரையோரப்பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மக்கள்படைப்பயிற்சிகளை வழங்கி ஒருவலுவான மக்கள்படைக்கட்டுமானத்தை உருவாக்கியது என அவர் கடற்புலிகளின் தளபதியாகப் பொறுப்புவகித்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர் எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் நீண்டுகொண்டேசெல்கின்றது.

லெப்.கேணல் மங்களேஸ் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 3

இந்தக்காலப்பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன்அவர்கள் கடற்புலிகளில் முதன்மையாகச்செயற்பட்ட பதினொரு இளநிலைத்தளபதிகளை அழைத்து அவர்களை கௌரவித்து கைத்துப்பாக்கிகள் (பிஸ்ரல்) வழங்கியபோது அந்த அணியில் மங்களேசண்ணாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2006-ம்ஆண்டு டிசெம்பர்மாதத்தில் பணிநிமிர்த்தமாக போர்க்கருவித்தொழிலகத்திற்கு பிரிவுமாற்றம்பெற்றுச்சென்று அங்கு குறுகியகாலம் கடமையாற்றிவிட்டு பின்னர் தேசியத்தலைவர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக படையப்புலனாய்வுப்பிரிவில் மங்களேசண்ணா உள்வாங்கப்பட்டு மன்னார்மாவட்டத்தில் குறித்த ஒருபகுதிக்களமுனைக்கு கட்டளைத்தளபதியாக மங்களேசண்ணா நியமிக்கப்பட்டு அங்கு களநடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தார்.

08-03-2008அன்று அரசபடையினர் ஆக்கிரமித்திருந்த ஒருபகுதியை மங்களேசண்ணா தலைமையிலான அணி அரசபடையினர்மீது தாக்குதலைத்தொடுத்து படையினரை அங்கிருந்து விரட்டியடித்ததையடுத்து அந்தப்பகுதியை கிளியர் பண்ணிக் கொண்டிருக்கையில் படையினர் புதைத்து விட்டுச்சென்ற மிதிவெடிகள் அடுத்தடுத்து வெடித்ததில் போராளிகளாலும் பொதுமக்களாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட எங்கள் மங்களேசண்ணா தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

சுமார் பதினெட்டு ஆண்டுகளாக தமிழீழமண் விடுதலையே உயிர்மூச்சாக வாழ்ந்து அந்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக விழிமூடிக்கொண்ட மங்களேசண்ணாவினதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களினதும்

நினைவுகளுடன் எமது விடுதலைப்பயணத்தைத்தொடர்வோமாக…
நினைவுப்பகிர்வு:
– கொற்றவன்.

                                               {+}{+}{+}{+}{+}{+}{+}{+}

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

லெப்.கேணல் தேவன்
குமாரசாமி அனுரக்குமார்
கண்டி
வீரச்சாவு: 08.03.2009

லெப்.கேணல் ராதா
மாணிக்கராசா யோகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.03.2009

கப்டன் காவலன்
சிவானந்தம் கேதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.2009

லெப்டினன்ட் நான்நிலா
சந்திரலிங்கம் தர்சினி
டி10, உருத்திரபுரம்
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை அமுதரசன்
ஏகநாதன் விஜிதரன்
புலோப்பளை கிழக்கு, பளை
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை விசாலினி
இராசகுமார் சாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை முகிலா
சிவலிங்கம் லாவண்யா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை இளங்கதிர்
கந்தையா கெங்காகௌரி
சிவநகர், உருத்திரபுரம்
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை புரட்சிக்கதிர்
சிறிஸ்கந்தராசா சிந்துஜா
கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை அழகுநிலா
கிருஸ்ணபிள்ளை பிரதீபா
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை மதுரவாணி
மகாலிங்கம் நிசாந்தினி
இளங்கோபுரம், ரெட்பானா, விசுவமடு
வீரச்சாவு: 08.03.2009

வீரவேங்கை நிறைஓவியம்
ஜோன்அமிர்தநாயகம் அமிர்தலோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2009

லெப்டினன்ட் தமிழ்வேங்கை
இராசரத்தினம் செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2008

2ம் லெப்டினன்ட் கதிர் (தமிழ்மங்கை)
சின்னாசிமுத்து றீற்றா
தேவன்பிட்டி, வெள்ளாங்குளம்
வீரச்சாவு: 08.03.2008

மேஜர் அகச்சோழன் (நிதன்)
நாராயணப்பிள்ளை நவநீதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.2007

போருதவிப்படை வீரர் அரவிந்தன்
சண்முகம் அரவிந்தன்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம், மன்னார்
வீரச்சாவு: 08.03.2007

மேஜர் செல்வக்கதிர்
பாலன் பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.03.2007

மேஜர் தணிகைவேல்
வடிவேல் தமிழ்ச்செல்வன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.03.2007

வீரவேங்கை அமுதன்
அற்புதராசா பன்னீர்செல்வன்
வரோதயன்நகர், புதுக்குடியிருப்பு, திருகோணமலை.
வீரச்சாவு: 08.03.2002

2ம் லெப்டினன்ட் மதன்
பழனியாண்டி யோகராசா
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2000

எல்லைப்படை வீரவேங்கை சிவாகரன்
கதிரவேல் சிவாகரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2000

வீரவேங்கை நிலவரசன்
போல்ராஜதுரை றொபின்பெக்கின்
சென்ஜேம்ஸ், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2000

லெப்டினன்ட் தமிழ்நம்பி
நல்லநாதன் புவனேந்திரன்
வீமன்காமம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2000

2ம் லெப்டினன்ட் நிசாந்தி
செல்வராசா தயாளினி
1ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.1999

வீரவேங்கை உலகவாணி
இரட்ணசபாபதி யசோ
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1999

கப்டன் கோவிந்தன்
குமாரவேல் ஜெகன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.03.1998

கப்டன் கடலரசன்
யோகாநந்தகுமார் டியூலன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.03.1998

வீரவேங்கை இராமதேவன் (யேசு)
ஐம்பெருமாள் ஜெயகரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997

வீரவேங்கை நாகதேவன்
முனியாண்டி காசிப்பிள்ளை
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997

வீரவேங்கை மதியாபரன்
கந்தசாமி விஜயகுமார்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997

வீரவேங்கை நிலாகரன்
சாமித்தம்பி கிருஸ்ணகுமார்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997

வீரவேங்கை ஆதங்கன்
வினாசித்தம்பி கமலநாதன்
திக்கோடை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997

வீரவேங்கை திருச்செல்வம்
குருநாதபிள்ளை பாக்கியராசா
கோளாவில், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997

வீரவேங்கை புஸ்பதன்
தெய்வநாயகம் பிரபாகரன்
வவுணதீவு, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997

2ம் லெப்டினன்ட் ரமேஸ் (பக்தன்)
முதலி இராசேந்திரன்
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1995

2ம் லெப்டினன்ட் சுந்தரயேஸ்வரன் (முரளி)
இராசதுரை மகேந்திரன்
கல்குடா, மட்டக்களப்பு,
வீரச்சாவு: 08.03.1994

வீரவேங்கை எழிற்செல்வன் (உமாகாந்)
கோபாலப்பிள்ளை கனகசிங்கம்
ஈச்சிலம்பத்தை, மூதூர் திருகோணமலை
வீரச்சாவு: 08.03.1994

வீரவேங்கை வாணன்
பொன்னுச்சாமி ஈஸ்வரநாதன்
முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.03.1993

லெப்டினன்ட் வாணன் (றெஜி)
கறுப்பையா கிருஷ்ணமூர்த்தி
வண்ணாங்குளம், அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 08.03.1993

லெப்டினன்ட் வீரா
தம்பிமுத்து தர்மசீலன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1991

வீரவேங்கை றிஸ்வான்
சுந்தரம்
கரிப்பட்டைமுறிப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.03.1990

கடற்புலி கப்டன் நெல்சன்
இரத்தினம் ஜெயபாலசிங்கம்
திருப்பூர், மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.03.1990

வீரவேங்கை ஆனந்த்
அருச்சுனன் ஜெகநாதன்
நாகமுனை, அம்பிலாந்தறை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 08.03.1990

லெப்டினன்ட் உத்தமன்
பூதப்பிள்ளை லவக்குமார்
ஏழாலை மேற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.03.1987

வீரவேங்கை கண்ணன்
கந்தையா பாபு
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1987

வீரவேங்கை ஸ்ராலின்
விருத்தாசலம் சிவசங்கர்
பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.03.1987

வீரவேங்கை கஜன்
இரத்தினசபாபதி கணேசகுமார்
வளலாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.03.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

பகிர்ந்துகொள்ள