வடகிழக்கில் தொடரும் போதைவஸ்த்து கைதுகள்!

You are currently viewing வடகிழக்கில் தொடரும் போதைவஸ்த்து கைதுகள்!

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மறித்து சோதனை மேற்கொண்டபோதே அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தருமபுரம் சிறீலங்கா காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை

மானிப்பாய் கட்டுடை பகுதியில் 20 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மானிப்பாய் சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments