வடக்கில் எகிறும் தொற்று – நேற்றும் 82 பேர்!!

You are currently viewing வடக்கில் எகிறும் தொற்று – நேற்றும் 82 பேர்!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 977 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டுப் பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவருக்கும் வவுனியா மாவட்டத்தில் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 12 பேருக்கும் பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒன்பது பேருக்கும் (நெல்லியடி சந்தைத் தொகுதி மற்றும் வெதுப்பகம் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்) தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் அச்சுவேலி, கோப்பாய் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட தலா ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எட்டுப் பேருக்கும் கோப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கும் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய ஐவருக்கும் ஒட்டுசுட்டான் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதேபோல், வவுனியா மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments