வடக்கில் நேற்று 137 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி; தேசிய கொரோனாச் செயலணித் தரவு!

You are currently viewing வடக்கில் நேற்று 137 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி; தேசிய கொரோனாச் செயலணித் தரவு!

தேசிய கொரோனா தடுப்புச் செயலணி இன்று வெளியிட்டுள்ள நேற்றைய (23) தொற்றாளர்களின் விபரத்தின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 137 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்,

யாழ். மாவட்டத்தில் 60 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 34 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 07 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று முதல் 2 பரிசோதனைக்கூடங்களிலும் பரிசோதனை இடம்பெறவில்லை என்று உள்ளூர் அச்சு ஊடகங்கள் இரண்டு செய்தி வெளியிட்ட நிலையிலும் கொரோனா தடுப்புச் செயணி நேற்றை பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதனிடையே உள்ளூரிலே தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களத் தரப்புக்களால் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்திலிருந்து தரவுகளும் வழங்கப்பட்டுள்ளமை எமது பிராந்திய செய்தியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

-மன்னாரில் இன்று திங்கட்கிழமை (24) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களாகவும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்த இந்த மாதம் 82 கொரோனா தொற்றாளர்களும், தற்போது வரை மொத்தமாக 442 நபர்களும், இந்த வருடம் மாத்திரம் 425 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் தற்போது வரை 2 ஆயிரத்து 72 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில் 412 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் மன்னார், வவுனியா மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதியில் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து கொண்டு வீடு செல்ல உள்ளனர்.

நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(25) பயணக்கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படாமல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் தேவை இன்றி வீடுகளில் இருந்து வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வரும் போது வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் வருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இறப்பும் நிகழ்ந்துள்ளது

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு மரணமடைந்த நபருக்கு கொவிட்தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணிப்பகுதியை சேர்ந்த குறித்தநபர் நேற்றயதினம் காலை சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் மரணமடைந்திருந்தார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments