வடக்கில் மேலும் 62 பேருக்கு கொரோனா!!

You are currently viewing வடக்கில் மேலும் 62 பேருக்கு கொரோனா!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 858 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேருக்கும் முல்லைத்தீவில் ஆறு பேருக்கும் கிளிநொச்சியில் ஆறு பேருக்கும் வவுனியாவில் 12 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 16 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவருக்கும் என 36 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 15 பேருக்கு தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக (கச்சேரி) உத்தியோகத்தர்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் மல்லாவி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி சுகாதார அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றுக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய இருவருக்கும் பூநகரி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும் தரும்புரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா சுகாதார அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் ஆறு பேருக்கும் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஐவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments