வடக்கு இளைஞர்கள் மூவருக்கு கொரோனா!

You are currently viewing வடக்கு இளைஞர்கள் மூவருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்று தங்கியிருந்த 11 பேரில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.

கடந்த வாரம் கொழும்பில் குறித்த 11 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

கொழும்பில் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாக குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்பது நடைமுறையாகும்.

இந்நிலையில் பிசிஆர் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக 11 இளைஞர்களும் தமது ஊர்களுக்குத் திரும்பியிருப்பதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்களில் 3 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தினால் இளைஞர்கள் வதியும் மாவட்டங்களின் சுகாதாரத் திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதனை அடுத்து குறித்த மூவரும் சுகாதார உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட்டு இன்று முற்பகல் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள