வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று சிறுமி நீரில் மூழ்கி மரணம்!

You are currently viewing வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று சிறுமி நீரில் மூழ்கி மரணம்!

வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.

இணைந்து நீராடிய நண்பர்களால் கூக்குரலிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத்தினர் அச் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளது.

இதன் போது அலன்மேரி ஆனந்தராஜா என்னும் 15 வயதுடைய எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது பருத்தித் துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments