வன்னியில் இருந்து யாழிற்கு கொண்டு செல்லப்பட்ட முதிரை குற்றிகள் மீட்பு!

You are currently viewing வன்னியில் இருந்து யாழிற்கு கொண்டு செல்லப்பட்ட முதிரை குற்றிகள் மீட்பு!

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு லொறியில் கடத்தப்பட்ட முதிரைக் குற்றிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாட்டெரு ஏற்றிய லொறி ஒன்றினுள் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 43 முதிரைக் குற்றிகளை யாழ்.சரசாலையில் வைத்து நேற்று மாலையில் கைப்பற்றியதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரைக் குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றை ஏற்றி வந்தவர்கள் தப்பியோடிய நிலையில் லொறியும் குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள