வயல் சண்டையில் இருவர் பலி!

You are currently viewing வயல் சண்டையில் இருவர் பலி!

திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான வயல் காணிச்சண்டையின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று (ஜன 29) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புல்மோட்டை பாலம்குளம் பகுதியிலே இடம்பெற்ற இக்குடும்ப சண்டையில் சலீம் மற்றும் வதூத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கிறனர்.

சுபைர் மற்றும் ஹஸன் ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகி புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் ஹஸன் என்பவரின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர் மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments