வல்லை பாலத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மாயம்!

You are currently viewing வல்லை பாலத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மாயம்!

யாழ்ப்பாணம்- வடமராட்சி, வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி நீரேரிக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார்.

புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 இளைஞர்களை, பொதுமக்கள் பிடித்து சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments