வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கை துண்டிக்கப்பட்டு கொலை!

You are currently viewing வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கை துண்டிக்கப்பட்டு கொலை!

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.நேற்று மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத்தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற சிறீலங்கா காவற்துறையினர் சடலத்தை மீட்டனர்.

குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் வயது 30 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments