வவுனியாவில் உந்துருளியை துவம்சம் செய்த யானை!!

You are currently viewing வவுனியாவில்  உந்துருளியை துவம்சம் செய்த யானை!!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் இன்று (15) சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அதிஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். குறித்த இளைஞர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிலில் சென்றுன்னார். 
 இதன் போது பருப்புக்கடந்தான்-கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்தக் கொண்டிருந்த போது இன்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் குறித்த வீதியில் மறைந்திருந்த காட்டு யானை குறித்த இளைஞர் மீது தாக்கியுள்ளது. இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிலில் இருந்து பாய்ந்துள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிலை யானை சேதப்படுத்தியுள்ளது. அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞர் மீட்கப்பட்டார். காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உந்துருளியை துவம்சம் செய்த யானை!! 1
வவுனியாவில் உந்துருளியை துவம்சம் செய்த யானை!! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments