வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது!

You are currently viewing வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்திருந்தனர்

இதன்போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் சென்ற ஒருவர் சிறீலங்கா காவற்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரிடம் இருந்து 20 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments