வவுனியாவில் ஒருவர் பயங்கரவாத பிரிவால் கைது!

You are currently viewing வவுனியாவில் ஒருவர் பயங்கரவாத பிரிவால் கைது!

வவுனியா பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்த்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்


கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து நபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments