வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

You are currently viewing வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ரமேஸ் (வயது- 34) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வருவதாக வீட்டிலுள்ள வயல் கிணற்றுக்கு சென்ற அவர், பல மணி நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை.

இதனால் அயலவர்களின் உதவியுடன் உறவினர்கள் கிணற்றில் தேடியபோதும் அவரைக் காணவில்லை.

​கிணற்றிலிருந்த நீரை 3 தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் இறைக்கப்பட்ட நிலையில் நேற்று (06) இரவு 11 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​

இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் குளித்துக்கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

சடலம் நேற்று இரவு வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments