வவுனியாவில் “குடு” போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது!

You are currently viewing வவுனியாவில் “குடு” போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது!

வவுனியாவில் “குடு” போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா சிறீலங்கா காவற்துறை நிலைய போதைத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட சிறீலங்கா காவற்துறையினர் அங்கு 10 கிராம் “குடு” போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய ஆண் ஒருவரும் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments