வவுனியாவில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் குளத்தில் மூழ்கி மரணம்!

You are currently viewing வவுனியாவில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் குளத்தில் மூழ்கி மரணம்!

வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் நேற்று பிற்பகல் குளிப்பதற்காக சென்ற நான்கு மாணவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு குளத்தில் குளிக்கச் சென்றனர்.

இவர்களில் இருவர் நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கினர் எனினும் அவர்கள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், கவிந்து – வயது 15, கைலாஸ் – 16 வயது மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments