வவுனியாவில் மூவர் பலி, 32 பேருக்கு தொற்று!

You are currently viewing வவுனியாவில் மூவர் பலி, 32 பேருக்கு தொற்று!

வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 24 வயது யுவதி உட்பட மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று காலைவெளியாகின.

அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 32 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இரவு வெளியாகிய முடிவுகளின் படி 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், காலை வெளியாகிய முடிவுகளின் படி 15 பேருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யாப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும், உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments