வவுனியாவில் 12 பேருக்கும் யாழில் 16 பேருக்கும் கொரோனா தொற்று!

You are currently viewing வவுனியாவில் 12 பேருக்கும் யாழில் 16 பேருக்கும் கொரோனா தொற்று!

வவுனியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா கற்பகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கு, திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வருகை தந்த வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.அத்துடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து  வருகைதந்த இருவரும் என 12 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை



யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ். மாநகர எல்லைக்குள் நால்வர், யாழ். சிறைச்சாலையில் ஐவர், சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் மூவர், யாழ். போதனா வைத்தியசாலையில் மூவர் என 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ். மாநகர எல்லைக்குள் நால்வர், யாழ். சிறைச்சாலையில் ஐவர், சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் மூவர், யாழ். போதனா வைத்தியசாலையில் மூவர் என 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments