விக்கியை கைது செய்யக் கோரி முறைப்பாடுகளை பதிவு செய்த சிங்கள அமைப்பு!

  • Post author:
You are currently viewing விக்கியை கைது செய்யக் கோரி முறைப்பாடுகளை பதிவு செய்த சிங்கள அமைப்பு!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யக் கோரி பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையில் நேற்று இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய சிங்கள தேசிய இயக்கம் இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது.

சமூகங்களிற்கிடையில் மோதலை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டு, விக்னேஸ்வரனை கைது செய்யும்படி அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கற்பனையான கட்டுக்கதைகளின்படி இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று வர்ணிக்கப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தார்.

கற்பனையாக மகாவம்சத்தினடிப்படையில் தமக்கான வரலாற்றை உருவாக்கி, தமிழர்களின் தொன்மையை நிராகரிப்பதை அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு அந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள