விசுவமடு எரிபொருள் நிலையத்தில் குழப்பம்- இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!

You are currently viewing விசுவமடு எரிபொருள் நிலையத்தில் குழப்பம்- இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!

விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து வானத்தை நோக்கி இராணுவத்தினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கும் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையிலேயே நேற்றுஇரவு 8.00 மணியளவில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொதுமக்களால் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிபிரயேகம் மேற்கொண்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments