வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

You are currently viewing வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரின் நினைவு பதினொன்றாம் ஆண்டு நிகழ்ச்சி மே 17-18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

கொரோனா தொற்று நோய் உலகமெல்லாம் பரவியிருக்கிற வேளையில் வழக்கம் போல் இந்நிகழ்ச்சியை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே அவரவர்கள் வீடுகளில் இருந்தவாறே அந்த நாட்களில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வீர வணக்கம் செலுத்தும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

பகிர்ந்துகொள்ள