வீதியில் உலரவிடப்பட்ட நெல்லினால் கிளிநொச்சியில் இரண்டாவது உயிர்ப்பலி!

You are currently viewing வீதியில் உலரவிடப்பட்ட நெல்லினால் கிளிநொச்சியில் இரண்டாவது உயிர்ப்பலி!

கிளிநொச்சி – புளியம்பொக்களை பகுதியில் பார ஊர்தி மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில், கண்டாவளை வெளிகண்டல் சந்திப்பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நெல் வீதியில் உலர விடப்படும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து நெல் கொள்வனவுக்காக புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.

இவ்விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்து சில நாட்களிற்கு முன்னர் பரத்தன் பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதிகளில் நெல் உலர்த்தப்படுவதால் இவ்வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments