வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம்!

You are currently viewing வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம்!

 

வவுனியா மணியர்குளம் குளப்பகுதியில் இருந்து காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று சிறீலங்கா காவற்துறையால் மீட்கப்பட்டது.

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பூவரசங்குளம் சிறீலங்கா காவற்துறைக்கு  நேற்று இரவு 9 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற சிறீலங்கா காவற்துறை  சடலத்தை மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் வயது 28 என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் சிறீலங்கா காவற்துறையினர்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments