வெலிசற முகாமில் இருந்த 2,193 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

You are currently viewing வெலிசற முகாமில் இருந்த 2,193 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

வெலிசற கடற்படை முகாமில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 2,193 கடற்படையினர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, இனப்படுகொலையாளி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரையில், கடற்படையைச் சேர்ந்த 578 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர்களில் 237 பேர், பூரணமாகக் குணமடைந்துள்ளனர் என்றும், ஏனைய 341 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள