வெளிநாடுகளில் தங்கியுள்ள நோர்வே குடிமக்களை அழைத்துவர தயாராகும் நோர்வே !

  • Post author:
You are currently viewing வெளிநாடுகளில் தங்கியுள்ள நோர்வே குடிமக்களை அழைத்துவர தயாராகும் நோர்வே !

கொரோனா நெருக்கடியால் வெளிநாடுகளிலிருந்து நோர்வே நாட்டவரை அழைத்து வருவதற்கு SAS, Norwegian மற்றும் Widerøe ஆகிய விமான நிறுவனங்களுடன் நோர்வே அரசு ஓர் இணக்க ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள நோர்வே நாட்டவர் நோர்வே திரும்புவதற்கு உதவும் வகையில் மார்ச் மாதத்தில் புதிய விமான சேவைகள் அமைக்கப்படும்.

எல்லைகள் மற்றும் வான்வெளிகள் மூடப்பட்டு வருவதாலும், மேலும் பல நாடுகளில் அவசரகால நிலை மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாலும், பல நோர்வே குடிமக்களுக்கு வீடு திரும்புவது கடினமாகி வருகின்றது என்று வெளியுறவு அமைச்சர் Ine Eriksen Søreide செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

மேலதிக விபரம்: NRK.no

பகிர்ந்துகொள்ள