ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமானது!

You are currently viewing ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமானது!

ஹற்றன், பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளது.

இதற்காக குறித்த கல்லூரியை இராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், அங்கு தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இராணுவம் 10 பேருந்துகளை ஈடுபடுத்தியது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவலையடுத்து நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, முன்னேற்பாடாக ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள