12 மூதாளர் இல்லங்கள் கொரொனா தொற்றுக்கு இலக்காகியது!

You are currently viewing 12 மூதாளர் இல்லங்கள் கொரொனா தொற்றுக்கு இலக்காகியது!

புதிய மூதாளர் இல்லங்களில் வெள்ளிக்கிழமை எந்த தொற்றுநோயும் கண்டறியப்படவில்லை என்று மெவோல்ட் வலியுறுத்துகிறார்இ ஆனால் வியாழக்கிழமை அவர்கள் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் குடியிருப்பாளர்களையும் பரிசோதித்திருந்தனர்.

இந்த சோதனைகளின் முடிவுகள் இன்னும் முழுமையாக தெளிவாகவில்லை.

ஆனால்

நகராட்சியில் உள்ள நகராட்சி மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மொத்தம் 563 ஊழியர்கள் இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று சமூகத்தொடர்பாளர் Henrik Mevold கூறுகிறார்.

சில அறிகுறிகளைக் கொண்டிருப்பதாலும்இ பரிசோதிக்கப்பட்டதாலும்இ சிலர் வெளிநாடுகளில் இருந்ததாலும்இ சிலர் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாலும்இ அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் நிறுவனம் தொடர்ந்து சோதனைகளை வழங்குகிறது. சுவாச நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட அனைத்து குடியிருப்பாளர்களையும் ஊழியர்களையும் அவர்கள் சோதித்து வருகின்றதாகவும் சமூகத்தொடர்பாளர் Henrik Mevold தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரை 12 மூதாளர் இல்லத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள